தீக்குளிக்காத விட்டில்கள் .5
-------------------------------------------------[“ எதற்குமே சிஸ்டம் சரியில்லை”
“சிஸ்டம் சரியாகத்தான் இருக்கு; ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் விலை போயிருக்கு”
“மாற்றமுடியாதா?”
“முடியாது”
மாத்தறதுன்னு முடிவு பண்றவாள்ளாம் அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிவருடிகள்தானே என்று ஒரு கருத்து அவருக்குள் எழுந்தது .
“உருவாக்கப்பட்ட கலகம் உடனே அடங்கிவிடும், அது சமூகத்தோட ஒட்டுமொத்த சீற்றத்திலேருந்து பொறக்கலே...! சம்ஹாரம் வெறும் கலகமல்ல. சிருஷ்டிக்க வேண்டிய காலத்தில் சிருஷ்டிக்க வேண்டியவன் சம்ஹாரம்ங்கற பே ரால தல மறவா தப்பிச்சு ஓடிண்டு தப்புகள் செய்யப்படாது.”]
ஸ்ரீராமன் சன்னதி மண்டபத்துக்கு அருகே கல்பாவியிருந்த தளத்தில் கிருஷ்ணமாச்சாரி, ராதாஇருவரும் உட்கார்ந்திருந்தனர். கோயிலுக்குள் கூட்டமில்லை. அங்குமிங்கும் ஓரிருவர் தென்பட்டனர். கிருஷ்ணமாச்சாரியும் ராதாவையும் பார்த்து ஒதுங்கிப் போனார்கள்
“கண்ணன் வந்திருந்தான்...”
கிருஷ்ணமாச்சாரி மொட்டையாக ஆரம்பித்தார்.
முகம் நிர்ச்சலனமாக இருந்தது. ராதாவுக்கு ஏனோ ஷில்லாங் ராணுவ ஆஸ்பத்திரியிலிருக்கும் டாக்டர் மோன்ஸி ஜார்ஜின் ஞாபகம் வந்தது. எவ்வளவு சிக்கலான ஆபரேஷன் என்றாலும் அந்த ஆள் முகத்தில் நரம்பு அசையாது என்று காப்டன் ஹயக்ரீவன் அவளிடம் சொல்வார்.
தம்பி தங்கைகளோடு ஹயக்ரீவன் சினிமாவுக்குப் போயிருந்தார். என்றுமில்லாத அதிசயமாக அவர் “ கோயிலுக்குப் போயிட்டு வரலாம் வாம்மா” என்று அழைக்கவே, அவள் ஏதோ இருக்கிறது என்று புரிந்துகொண்டாள்.
அப்பாவுக்கு எப்படி ஒரு கருமுடிகூட இல்லாமல் தலை நரைத்துவிட்டது?
இந்த ரிடையர்மெண்ட் அவரை அன்றாடம் கொன்று கொண்டிருக்கிறதா?.
“எங்கிட்டே படிச்சவாள்ளே எத்தனையோ பேர் ஒசந்தும் போயிருக்கா..., தாழ்ந்தும் போயிருக்கா...! நான் ஏமாந்தும் போயுமிருக்கேன்..., அதிசயப்பட்டுமிருக்கேன். பகவத் சங்கல்பம் வேறே..., நாம போட்டுக்கற கணக்கு வேறே...”
“பகவத் சங்கல்பத்தைப் பற்றி பேசவா கூப்பிட்டு வந்தீர்கள்?”
“கண்ணன்... மணின்னா அப்படி ஒரு மணியா இருந்தவன். அவன்ட்ட நான் அதிகமா எதிர்பார்த்தேன்” அவர் தொண்டை ஏனோ அடைத்துக்கொண்டது. அவர் கனைத்துக் கொண்டு மேலே தொடர்ந்தார்.
ராதா அவரை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.
“போன பதினைஞ்சா நாள், நான் காத்தோட்டமா வெளித் திண்ணையிலே துண்டை விரிச்சுப் படுத்திருந்தேன். மானம் இருண்டுண்டு மழையும் பெய்யாமே, காத்தும் இல்லாமே ஒரு புழுக்கம். கண் அசந்திட்டிருக்கேன். ‘சார்’னு குரல் கேட்டது. கண்விழிச்சா கருப்பா மீசையும் தலைப்பாவுமா ஒருத்தன் நிக்கறான். எனக்கு யார்னே வௌங்கலே. இருட்டிலே கண்ணும் தெரியலே... யாருன்னு கேட்டேன்.
“பசுமாத்தூர் கண்ணன்னான்...”
நேக்கு தூக்கிவாரிப் போட்டது. எழுந்து உட்கார்ந்துண்டேன். அவன் நக்ஸல் ஆயிட்டதா கேள்விப்பட்டேன். கொலை வழக்கிலே போலிஸ் தேடறதுன்னு பேப்பர்லேயும் வாசிச்சேன்.”
ராதா குனிந்து வலது கைப் பெருவிரல் நகத்தால் நடுவிரல் நகத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.
“என்னப்பா..., என்ன விஷயம்?”னு கேட்டேன்.
“போலிஸ் வந்துன்டிருக்கு. எனக்கு எங்கயாவது இந்த நைட் தங்கணும்னான். பேப்பர்ல நியூஸ் வாசிச்சதிலேருந்து அவனோட பேசனும்னு எனக்குத் தோனிண்டிருந்தது. அன்னியத் தேதி வரைக்கும் நான் சட்ட விரோதமா ஒன்னும் பண்ணலே. வாய்விட்டு அவன் கேக்கறப்ப என்னாலே மறுக்க முடியலே. அன்னிக்கு எதிராத்து வெளி ரூம்லே குடியிருக்கற டீச்சர், வெக்கேஷன்ல ஊருக்குப் போயிருந்தார். எப்பவும் ரூம் சாவி நம்மாத்துலதான் கொடுத்துட்டுப் போவார். அவனக் கூட்டிண்டு சாவியோட அங்கே போனேன். சாபிட்டயான்னு கேட்டேன். சாப்பிட்டேன்னான். பொய்ன்னு புரிஞ்சது. சித்த இரு வர்றேன்னு ஆத்துக்கு வந்தேன். கமலத்தை எழுப்பலே. அடுக்களைக்குப் போனேன். சோத்துப்பானையிலே தூத்தம் கொட்டி வச்சிருந்தா. அதான் இருந்தது. ஒரு டிபன் பாக்ஸிலே அதை அப்படியே கொட்டி எடுத்துண்டு, ஒரு ஊறுகாத் துண்டோட போனேன்.”
அவர் சட்டென்று நிறுத்திவிட்டு யோசித்தார்.
“மொதல்லே ரொம்ப மறுத்தான். அப்புறமா சாப்பிட்டான். கண்ணா உனக்கு என்ன வந்ததுன்னு கேட்டேன். அவன் பேசாம சிரிச்சான்.”
கிருஷ்ணமாச்சாரி பேசிக் கொண்டிருந்தார். நட்சத்திரம் மின்னுகின்ற, தென்னோலைகள் அசைகின்ற, கண்ணன் வந்த அந்த மௌனமான இரவின் சித்திரம் அவள் மனசில் விரிந்தது.
“சுருக்கமா சொல்லு. உனக்கு இந்தச் சமூகத்துப் பேர்ல ரொம்பக் கோவம்?”
“வெறும் கோபங்கறது சீக்கிரமா ஆறிடும் சார். ஏதோ போனஸ் சம்பள உயர்வு வேணும்னு போராடி கெடைச்சதும் அடுத்த டார்கெட்டுப் போக கேப் கொடுக்கற மாதிரி”
ஆனா நான் போராடறது வேற ஒண்ணுக்காக
“என்ன? “
“ஆல்ரைட். நேக்கு பதில் சொல்லு. வீடு சரியில்லேன்னு பண்ட பாத்திரங்களை வீசி எறிஞ்சு, இடிச்சு ஒடச்சு, இருக்கறவாளைக் குத்தி இம்சிச்சு... நீ என்ன சாதிக்கப் போறே?”
“பழசை இடிச்சாத்தான் புதுசைக் கட்ட முடியும்.”
“கண்டமானமா இடிச்சுடப்படாது. இடிக்கறவன் கையிலே கட்டறதுக்குத் திட்டான ப்ளான் வேணும். வெறுமனே இடிச்சுவிட்டுட்டு பின்னாடி எவனோ கட்ட வருவான்னு போயிடப்படாது...”
“இட் காண்ட் பி ஹெல்ப்ட். ஒருத்தன் இடிக்கணும். இன்னொருத்தன் கட்டணும். சம்ஹாரம்... பின்னாடி சிருஷ்டி...”
“சிருஷ்டிக்க வேண்டிவன் சம்ஹரிக்கப்படாது. இது சம்ஹாரமே இல்லே. சமூக மாற்றம். சமூகம் முழுவதுமே கிளர்ந்து ஒட்டுக்க நின்னு செய்யவேண்டிய காரியம். அதுக்குக் காலம் வேணும். ஜனங்களோட நம்பிக்கை வேணும். சித்தாந்தம் வேணும்.”
கோயிலும், ஸ்வாமியும், வைதீகமும், டிஸிப்ளினுமாய் ஒதுங்கியிருக்கின்ற கிருஷ்ணமாச்சாரி என்ற ரிடையர்ட் வாத்தியார் எப்படி மானசீகமாக இந்தச் சமூகக் கொந்தளிப்போடு ஒரு சம்பந்தம் வைத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டாள் ராதா.
“இதுவும் ஒரு சித்தாந்தம் தான் சார். ‘க்ரியேட். அன் அன்ரெஸ்ட் இட்வில் பிகெட் ரெவல்யூஷன். கலகத்தைச் சிருஷ்டி செய். அது புரட்சியைப் பெற்றெடுக்கும்.”
“ எதற்குமே சிஸ்டம் சரியில்லை”
“சிஸ்டம் சரியாகத்தான் இருக்கு; ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் விலை போயிருக்கு”
“மாற்றமுடியாதா?”
“முடியாது”
மாத்தறதுன்னு முடிவு பண்றவாள்ளாம் அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிவருடிகள்தானே என்று ஒரு கருத்து அவருக்குள் எழுந்தது .
“உருவாக்கப்பட்ட கலகம் உடனே அடங்கிவிடும், அது சமூகத்தோட ஒட்டுமொத்த சீற்றத்திலேருந்து பொறக்கலே...! சம்ஹாரம் வெறும் கலகமல்ல. சிருஷ்டிக்க வேண்டிய காலத்தில் சிருஷ்டிக்க வேண்டியவன் சம்ஹாரம்ங்கற பே ரால தல மறவா தப்பிச்சு ஓடிண்டு தப்புகள் செய்யப்படாது.”
ஆசிரியரும் மாணவனும் தர்க்கித்தனர்.
“சிருஷ்டின்னு நீங்க எதைச் சொல்றீங்க?”
“நீ சொல்ற அந்தச் சமூக மாற்றத்திற்கு வேண்டிய மனோநிலை. அது மாத்திரமே லட்சியமாய்க் கொண்ட மனுஷாள். ஒருத்தர் இல்லே... லட்சோப லட்சமா... ஒரு தலைவன் சொன்னா உயிரை விடற மாதிரி... ஒரு காந்தி மாதிரி... அவாளுக்குள்ளே அந்த லட்சிய பிராப்தியின் பேர்ல ஒரு திடசித்தம். அது சிருஷ்டி. அந்தச் சிருஷ்டி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லே.. ஒரு மனுஷன் அதுக்குன்னே பொறந்துவரணும்.பொழுபோக்காப்பேசக்கூடாது
கோயிலில் சந்தியாகால பூஜைக்குத் தவிலும் நாதஸ்வரமும் முழங்கின. பகலெல்லாம் தகித்த பூமியின் மீது சிரம பரிகாரம்செய்வது போன்ற காற்று மெல்லத் தவழ்ந்தது.
ராதா தந்தையைப் புதிய மரியாதையோடு பார்த்தாள்.
“அதுக்கு அவன் பதிலே சொல்லலே. காதிலே வாங்கிண்டவன்போல மௌனமா இருந்தான். நீ எங்கே இருக்கேன்னு நன்னா தெரிஞ்சு வச்சிருக்கான். நீ வந்தியான்னு விசாரிச்சான்.”
ராதாவுக்கு அதற்குமேல் அங்கு உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் எழுந்து போகவும் துணிவில்லை. அது அவளைக் காட்டிக் கொடுத்து விடும்.
“நான் சொன்னேன். அவன் கேட்டதைப் பார்த்தா ஒருவேளை உன்னைப் பார்க்க வருவானோன்னு தோணித்து. பி கேர்ஃபுல்” அவர் நிறுத்திக் கொண்டார்.
ஒரு நீண்ட மௌனம். அங்கே ஒரு பதில் தேவை.
ஆனால் ராதா அதைச் சொல்லவில்லை. மனசிற்குள் சொல்லிக்கொண்டாள்
ஸோ... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கறது. என்னை எச்சரிக்கறேள். என்னென்ன நடந்ததோ அதுக்காக என்னை மெச்சிக்கறேள். ஏதாவது நடந்துடப் போறதோன்னு கவலைப்படறேள். என்னமோ உங்களுக்குப் புரிஞ்சிருக்கறதே... சந்தோஷம்... அதுவரைக்கும் சந்தோஷம்! நான் இனிமே உங்களாண்டே ‘கில்டியா ஃபீல் பண்ண வாண்டாம்.
ஏதாவது பேசி அந்தச் சூழ்நிலையை லகுவாக்க வேண்டுமென்று ராதா விரும்பினாள்.
“பத்து நாள் வந்து எங்களோட ஷில்லாங்கிலே இருங்களேம்ப்பா. ஒரு சேஞ்ச் இருக்கும்”
“நான் எங்கேம்மா வரட்டும்? பிரயாணம் உடம்புக்கு ஒத்துக்கலே, மனசுக்கு'சேஞ்ச்’ தேவைப்படலே. நெறய புஸ்தகங்களை வாசிக்கறேன். ஒரு நர்சரி ஸ்கூல் வைக்கலாமான்னு யோசனை பண்ணிண்டிருக்கேன். பகவத் சங்கல்பம் எப்படியோ... பார்ப்போம். டயமாறது. கௌம்புவோமா?”
அவர் எழுந்து கொண்டார். (தொடரும் )
“கண்ணன் வந்திருந்தான்...”
கிருஷ்ணமாச்சாரி மொட்டையாக ஆரம்பித்தார்.
முகம் நிர்ச்சலனமாக இருந்தது. ராதாவுக்கு ஏனோ ஷில்லாங் ராணுவ ஆஸ்பத்திரியிலிருக்கும் டாக்டர் மோன்ஸி ஜார்ஜின் ஞாபகம் வந்தது. எவ்வளவு சிக்கலான ஆபரேஷன் என்றாலும் அந்த ஆள் முகத்தில் நரம்பு அசையாது என்று காப்டன் ஹயக்ரீவன் அவளிடம் சொல்வார்.
தம்பி தங்கைகளோடு ஹயக்ரீவன் சினிமாவுக்குப் போயிருந்தார். என்றுமில்லாத அதிசயமாக அவர் “ கோயிலுக்குப் போயிட்டு வரலாம் வாம்மா” என்று அழைக்கவே, அவள் ஏதோ இருக்கிறது என்று புரிந்துகொண்டாள்.
அப்பாவுக்கு எப்படி ஒரு கருமுடிகூட இல்லாமல் தலை நரைத்துவிட்டது?
இந்த ரிடையர்மெண்ட் அவரை அன்றாடம் கொன்று கொண்டிருக்கிறதா?.
“எங்கிட்டே படிச்சவாள்ளே எத்தனையோ பேர் ஒசந்தும் போயிருக்கா..., தாழ்ந்தும் போயிருக்கா...! நான் ஏமாந்தும் போயுமிருக்கேன்..., அதிசயப்பட்டுமிருக்கேன். பகவத் சங்கல்பம் வேறே..., நாம போட்டுக்கற கணக்கு வேறே...”
“பகவத் சங்கல்பத்தைப் பற்றி பேசவா கூப்பிட்டு வந்தீர்கள்?”
“கண்ணன்... மணின்னா அப்படி ஒரு மணியா இருந்தவன். அவன்ட்ட நான் அதிகமா எதிர்பார்த்தேன்” அவர் தொண்டை ஏனோ அடைத்துக்கொண்டது. அவர் கனைத்துக் கொண்டு மேலே தொடர்ந்தார்.
ராதா அவரை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தாள்.
“போன பதினைஞ்சா நாள், நான் காத்தோட்டமா வெளித் திண்ணையிலே துண்டை விரிச்சுப் படுத்திருந்தேன். மானம் இருண்டுண்டு மழையும் பெய்யாமே, காத்தும் இல்லாமே ஒரு புழுக்கம். கண் அசந்திட்டிருக்கேன். ‘சார்’னு குரல் கேட்டது. கண்விழிச்சா கருப்பா மீசையும் தலைப்பாவுமா ஒருத்தன் நிக்கறான். எனக்கு யார்னே வௌங்கலே. இருட்டிலே கண்ணும் தெரியலே... யாருன்னு கேட்டேன்.
“பசுமாத்தூர் கண்ணன்னான்...”
நேக்கு தூக்கிவாரிப் போட்டது. எழுந்து உட்கார்ந்துண்டேன். அவன் நக்ஸல் ஆயிட்டதா கேள்விப்பட்டேன். கொலை வழக்கிலே போலிஸ் தேடறதுன்னு பேப்பர்லேயும் வாசிச்சேன்.”
ராதா குனிந்து வலது கைப் பெருவிரல் நகத்தால் நடுவிரல் நகத்தைக் கீறிக் கொண்டிருந்தாள்.
“என்னப்பா..., என்ன விஷயம்?”னு கேட்டேன்.
“போலிஸ் வந்துன்டிருக்கு. எனக்கு எங்கயாவது இந்த நைட் தங்கணும்னான். பேப்பர்ல நியூஸ் வாசிச்சதிலேருந்து அவனோட பேசனும்னு எனக்குத் தோனிண்டிருந்தது. அன்னியத் தேதி வரைக்கும் நான் சட்ட விரோதமா ஒன்னும் பண்ணலே. வாய்விட்டு அவன் கேக்கறப்ப என்னாலே மறுக்க முடியலே. அன்னிக்கு எதிராத்து வெளி ரூம்லே குடியிருக்கற டீச்சர், வெக்கேஷன்ல ஊருக்குப் போயிருந்தார். எப்பவும் ரூம் சாவி நம்மாத்துலதான் கொடுத்துட்டுப் போவார். அவனக் கூட்டிண்டு சாவியோட அங்கே போனேன். சாபிட்டயான்னு கேட்டேன். சாப்பிட்டேன்னான். பொய்ன்னு புரிஞ்சது. சித்த இரு வர்றேன்னு ஆத்துக்கு வந்தேன். கமலத்தை எழுப்பலே. அடுக்களைக்குப் போனேன். சோத்துப்பானையிலே தூத்தம் கொட்டி வச்சிருந்தா. அதான் இருந்தது. ஒரு டிபன் பாக்ஸிலே அதை அப்படியே கொட்டி எடுத்துண்டு, ஒரு ஊறுகாத் துண்டோட போனேன்.”
அவர் சட்டென்று நிறுத்திவிட்டு யோசித்தார்.
“மொதல்லே ரொம்ப மறுத்தான். அப்புறமா சாப்பிட்டான். கண்ணா உனக்கு என்ன வந்ததுன்னு கேட்டேன். அவன் பேசாம சிரிச்சான்.”
கிருஷ்ணமாச்சாரி பேசிக் கொண்டிருந்தார். நட்சத்திரம் மின்னுகின்ற, தென்னோலைகள் அசைகின்ற, கண்ணன் வந்த அந்த மௌனமான இரவின் சித்திரம் அவள் மனசில் விரிந்தது.
“சுருக்கமா சொல்லு. உனக்கு இந்தச் சமூகத்துப் பேர்ல ரொம்பக் கோவம்?”
“வெறும் கோபங்கறது சீக்கிரமா ஆறிடும் சார். ஏதோ போனஸ் சம்பள உயர்வு வேணும்னு போராடி கெடைச்சதும் அடுத்த டார்கெட்டுப் போக கேப் கொடுக்கற மாதிரி”
ஆனா நான் போராடறது வேற ஒண்ணுக்காக
“என்ன? “
“ஆல்ரைட். நேக்கு பதில் சொல்லு. வீடு சரியில்லேன்னு பண்ட பாத்திரங்களை வீசி எறிஞ்சு, இடிச்சு ஒடச்சு, இருக்கறவாளைக் குத்தி இம்சிச்சு... நீ என்ன சாதிக்கப் போறே?”
“பழசை இடிச்சாத்தான் புதுசைக் கட்ட முடியும்.”
“கண்டமானமா இடிச்சுடப்படாது. இடிக்கறவன் கையிலே கட்டறதுக்குத் திட்டான ப்ளான் வேணும். வெறுமனே இடிச்சுவிட்டுட்டு பின்னாடி எவனோ கட்ட வருவான்னு போயிடப்படாது...”
“இட் காண்ட் பி ஹெல்ப்ட். ஒருத்தன் இடிக்கணும். இன்னொருத்தன் கட்டணும். சம்ஹாரம்... பின்னாடி சிருஷ்டி...”
“சிருஷ்டிக்க வேண்டிவன் சம்ஹரிக்கப்படாது. இது சம்ஹாரமே இல்லே. சமூக மாற்றம். சமூகம் முழுவதுமே கிளர்ந்து ஒட்டுக்க நின்னு செய்யவேண்டிய காரியம். அதுக்குக் காலம் வேணும். ஜனங்களோட நம்பிக்கை வேணும். சித்தாந்தம் வேணும்.”
கோயிலும், ஸ்வாமியும், வைதீகமும், டிஸிப்ளினுமாய் ஒதுங்கியிருக்கின்ற கிருஷ்ணமாச்சாரி என்ற ரிடையர்ட் வாத்தியார் எப்படி மானசீகமாக இந்தச் சமூகக் கொந்தளிப்போடு ஒரு சம்பந்தம் வைத்திருக்கிறார் என்று புரிந்துகொண்டாள் ராதா.
“இதுவும் ஒரு சித்தாந்தம் தான் சார். ‘க்ரியேட். அன் அன்ரெஸ்ட் இட்வில் பிகெட் ரெவல்யூஷன். கலகத்தைச் சிருஷ்டி செய். அது புரட்சியைப் பெற்றெடுக்கும்.”
“ எதற்குமே சிஸ்டம் சரியில்லை”
“சிஸ்டம் சரியாகத்தான் இருக்கு; ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான் விலை போயிருக்கு”
“மாற்றமுடியாதா?”
“முடியாது”
மாத்தறதுன்னு முடிவு பண்றவாள்ளாம் அதே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிவருடிகள்தானே என்று ஒரு கருத்து அவருக்குள் எழுந்தது .
“உருவாக்கப்பட்ட கலகம் உடனே அடங்கிவிடும், அது சமூகத்தோட ஒட்டுமொத்த சீற்றத்திலேருந்து பொறக்கலே...! சம்ஹாரம் வெறும் கலகமல்ல. சிருஷ்டிக்க வேண்டிய காலத்தில் சிருஷ்டிக்க வேண்டியவன் சம்ஹாரம்ங்கற பே ரால தல மறவா தப்பிச்சு ஓடிண்டு தப்புகள் செய்யப்படாது.”
ஆசிரியரும் மாணவனும் தர்க்கித்தனர்.
“சிருஷ்டின்னு நீங்க எதைச் சொல்றீங்க?”
“நீ சொல்ற அந்தச் சமூக மாற்றத்திற்கு வேண்டிய மனோநிலை. அது மாத்திரமே லட்சியமாய்க் கொண்ட மனுஷாள். ஒருத்தர் இல்லே... லட்சோப லட்சமா... ஒரு தலைவன் சொன்னா உயிரை விடற மாதிரி... ஒரு காந்தி மாதிரி... அவாளுக்குள்ளே அந்த லட்சிய பிராப்தியின் பேர்ல ஒரு திடசித்தம். அது சிருஷ்டி. அந்தச் சிருஷ்டி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லே.. ஒரு மனுஷன் அதுக்குன்னே பொறந்துவரணும்.பொழுபோக்காப்பேசக்கூடாது
கோயிலில் சந்தியாகால பூஜைக்குத் தவிலும் நாதஸ்வரமும் முழங்கின. பகலெல்லாம் தகித்த பூமியின் மீது சிரம பரிகாரம்செய்வது போன்ற காற்று மெல்லத் தவழ்ந்தது.
ராதா தந்தையைப் புதிய மரியாதையோடு பார்த்தாள்.
“அதுக்கு அவன் பதிலே சொல்லலே. காதிலே வாங்கிண்டவன்போல மௌனமா இருந்தான். நீ எங்கே இருக்கேன்னு நன்னா தெரிஞ்சு வச்சிருக்கான். நீ வந்தியான்னு விசாரிச்சான்.”
ராதாவுக்கு அதற்குமேல் அங்கு உட்கார்ந்திருக்கப் பிடிக்கவில்லை. ஆனால் எழுந்து போகவும் துணிவில்லை. அது அவளைக் காட்டிக் கொடுத்து விடும்.
“நான் சொன்னேன். அவன் கேட்டதைப் பார்த்தா ஒருவேளை உன்னைப் பார்க்க வருவானோன்னு தோணித்து. பி கேர்ஃபுல்” அவர் நிறுத்திக் கொண்டார்.
ஒரு நீண்ட மௌனம். அங்கே ஒரு பதில் தேவை.
ஆனால் ராதா அதைச் சொல்லவில்லை. மனசிற்குள் சொல்லிக்கொண்டாள்
ஸோ... உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கறது. என்னை எச்சரிக்கறேள். என்னென்ன நடந்ததோ அதுக்காக என்னை மெச்சிக்கறேள். ஏதாவது நடந்துடப் போறதோன்னு கவலைப்படறேள். என்னமோ உங்களுக்குப் புரிஞ்சிருக்கறதே... சந்தோஷம்... அதுவரைக்கும் சந்தோஷம்! நான் இனிமே உங்களாண்டே ‘கில்டியா ஃபீல் பண்ண வாண்டாம்.
ஏதாவது பேசி அந்தச் சூழ்நிலையை லகுவாக்க வேண்டுமென்று ராதா விரும்பினாள்.
“பத்து நாள் வந்து எங்களோட ஷில்லாங்கிலே இருங்களேம்ப்பா. ஒரு சேஞ்ச் இருக்கும்”
“நான் எங்கேம்மா வரட்டும்? பிரயாணம் உடம்புக்கு ஒத்துக்கலே, மனசுக்கு'சேஞ்ச்’ தேவைப்படலே. நெறய புஸ்தகங்களை வாசிக்கறேன். ஒரு நர்சரி ஸ்கூல் வைக்கலாமான்னு யோசனை பண்ணிண்டிருக்கேன். பகவத் சங்கல்பம் எப்படியோ... பார்ப்போம். டயமாறது. கௌம்புவோமா?”
அவர் எழுந்து கொண்டார். (தொடரும் )
No comments:
Post a Comment